Advertising Call us
044 – 2223 6399
99628 80902




News Gallary

தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் சார்பில்

தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் சார்பில் 13வது மாநில வில்வித்தை போட்டி பொதுச்செயலாளர் மாஸ்டர் உசைனி தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில் குரோம்பேட்டையை சேர்ந்த மாணவி தீக்ஷிதா மூன்று தங்கம், வெண்கலம் பதக்கம் பெற்றதற்கு ஏ.கே.நகர் நலச்சங்கம் சார்பாக லயன் காஞ்சி கணேசன் வாழ்த்திய போது எடுத்த படம்.

13வது தமிழ்நாடு மாநில வில்வித்தை போட்டி

அடையார் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.செங்கல்பட்டு மற்றும் சென்னை தெற்கு இடங்களை சேர்ந்த மாணவர்கள் பல பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ‘ஹு ஆர்ச்சரி மிஷினை’ சேர்ந்த பயிற்சியாளர் வெங்கடேசனிடம் குரோம்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி பணியாளர்கள் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பராமரிக்கப்படும் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்றவர்கள். குரோம்பேட்டை ஸ்டேட் பாங்க் காலனி பணியாளர்கள் குடியிருப்போர் நல சங்க செயலாளர் சௌமிய நாராயணன் மற்றும் உறுப்பினர் ராஜு பரிசுப்பெற்றோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மக்கள் விழிப்புணர்வு மையத்தின் சார்பில்

குரோம்பேட்டையில் மக்கள் விழிப்புணர்வு மையத்தின் சார்பில் பல்லவபுரம் நகராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து கட்சிகளிடம் வேண்டுகோள் வைத்து துண்டுப்பிரசுரம் மக்களிடம் வினியோகிக்கப்பட்டது! 10 சமூக ஆர்வலர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்திலும் கழுத்திலும் கோரிக்கை அட்டையை மாட்டிக்கொண்டு நகராட்சியில் தொடங்கி சிஎல்சி ஒர்க்ஸ் ரோடு, ஜிஎஸ்டி சாலை, ஸ்டேஷன் பார்டர் ரோடு, ராதாநகர் மெயின்ரோடு, ஸ்டேஷன் பார்டர் ரோடு, ஆர்பி ரோடு,அஸ்தினாபுரத்தில் முடிவுற்றது. மையத்தின் தலைவர் வி.சந்தானம் தலைமையேற்று நடத்தினார்.

குரோம்பேட்டையை சேர்ந்த

குரோம்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் லயன் எம்.ஜெயபால் &செல்வகுமாரி மகன் ஜெ.அரவிந்த்க்கும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தியும், ஏ.மதிவாணன்&வாகீஸ்வரி மகள் எம்.அருணாவுக்கும் திருமணம் கடந்த மாதம் (பிப்ரவரி) 24&ந்தேதி நெல்லை மாவட்டம் சீதபர்நல்லூரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் நடந்தது. அதையொட்டி கடந்த 3&ந்தேதி பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஆரணா மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலடி அருணா பூங்கோதை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், லயன்ஸ் க்ளப் பிரமுகர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியபோது எடுத்தபடம்.

Our Youtube Channel Subscribe Now :-

Our Youtube Channel Subscribe Now :- Click Link Below: https://www.youtube.com/channel/UCYBvE9seCVYkMnfT6_WnHcg

பிபிஆர் நலச்சங்கத்தில்...

குரோம்பேட்டை பிபிஆர் நலச்சங்கத்தில் மத நல்லிணக்கத்தை பேனும் விதமாக, இணைப்புமையம் சார்பில் அனைத்து மதங்களை சேர்ந்த நண்பர்கள் கலந்துகொண்ட சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண்களும் பெருவாரியாக கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இஸ்லாமிய மதகுரு இமாம் அகமது அலி, கிருஸ்தவ மதகுரு லாரன்ஸ், டிவி புகழ் நகைச்சுவை பேச்சாளர் புலவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மத நல்லிணக்கத்திற்கான பயனுள்ள கருத்துக்களை வழங்கினர்.

பொங்கல் பரிசாக...

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம் நகரம் பம்மல் நகரம் அனகாபுத்தூர் நகரம் திருநீர்மலை பேரூர் பொழிச்சலூர் திரிசூலம் ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசாக சுமார் 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழகத்தினருக்கு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தனது சொந்த செலவில் வேஷ்டி சட்டை புடவை இளைஞரணிக்கு வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போன்ற பொருட்களை அடங்கிய தொகுப்பு பைக்களை வழங்கினர். இதில் நகரக் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணியினர் பரிசுப் பொருட்களை பெற்று சென்றனர். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் இ.ஜோசப் அண்ணாதுரை கலந்து கொண்டார்.

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம்.....

குரோம்பேட்டை நேரு தெருவில் மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம் சார்பில் லயன்.ராஜமாணிக்கம் பூ விற்கும் ஐந்து பெண்களுக்கு நிழற்குடை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் லயன். கே.எம்.ஜெ. அசோக், லயன் காஞ்சி கணேசன், லயன் எம்.ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.